குடும்ப கஷ்டத்தால் பெற்ற கடன்... அந்த பணத்தையும் திருடிய `ஒர்ஸ்ட்' திருடன்... மொத்தமாக இடிந்த பெண்

Update: 2024-05-09 14:23 GMT

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே இரு சக்கர வாகனத்தில் இருந்து ஒரு லட்ச ரூபாயை திருடி சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மோரக்கனியனூர் கிராமத்தை சேர்ந்த கௌசல்யா, 3 சவரன் நகையை வங்கியில் அடகு வைத்து விட்டு ஒரு லட்சம் பணம் பெற்றுள்ளார். அந்த பணத்தை வங்கி முன் நிறுத்தப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனத்தில் வைத்து விட்டு மீண்டும் வங்கியின் உள்ளே சென்றுள்ளார் பின்னர், வெளியே வந்து தனது இரு சக்கர வாகனத்தை பார்த்த போது அதில் இருந்து பணம் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....

Tags:    

மேலும் செய்திகள்