இஃப்தார் உணவு நோன்பு கஞ்சி வழங்க அனுமதி மறுப்பு - மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

ரம்ஜான் மாதத்தை ஒட்டி தமிழகத்தில் சிவப்பு மண்டல பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் உணவும், நோன்பு கஞ்சியும் வழங்க அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-16 04:36 GMT
ரம்ஜான் மாதத்தை ஒட்டி, தமிழகத்தில் சிவப்பு மண்டல பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமியர்கள் அல்லாதவர்களுக்கும் இஃப்தார் உணவும், நோன்பு கஞ்சியும் வழங்க அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் விவசாயப் பிரிவின் மாநில செயலாளர் ஷேக் தாக்கல் செய்திருந்த இந்த மனு விசாரணைக்கு வந்த போது கோரிக்கையை ஏற்க மறுத்து சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.
Tags:    

மேலும் செய்திகள்