காவல்துறை - சீருடை அலுவலர்களுக்கு : பொங்கல் பதக்கம் வழங்க முதலமைச்சர் ஆணை

மூவாயிரத்து 186 காவல்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் பொங்கல் பதக்கம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-01-14 09:36 GMT
தமிழக காவல், தீயணைப்பு - மீட்புப்பணி மற்றும் சிறைத் துறைகளில் பணியாற்றும் பணியாளர்கள் தமது பணியில் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்பாட்டை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில்,  ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளன்று தமிழக முதலமைச்சரின் பதக்கங்கள்  அறிவிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு, காவல்துறையை சேர்ந்த மூவாயிரம் பேருக்கும், 120 அலுவலர்களுக்கும், சிறைத் துறையில்  60 பேருக்கும், தமிழக முதலமைச்சரின் சிறப்பு பணிப் பதக்கங்கள்' வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இந்த  பதக்கங்கள் பெறுபவர்களுக்கு நிலை வேறுபாடின்றி மாதாந்திர பதக்கப்படி 400 ரூபாய்,  பிப்ரவரி ஒன்றாம்  தேதி முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.  காவல் வானொலி பிரிவு,  நாய் படைப் பிரிவு மற்றும் புகைப்படக் கலைஞர்கள் பிரிவுகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என ஒவ்வொரு பிரிவிலும் 2 அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் என, ஆக மொத்தம்  6 அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்' அறிவிக்கப்பட்டு உள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்