தூத்துக்குடி : பார்வையாளர்களை கவர்ந்த புறா பந்தயம்
தூத்துக்குடியில் நடைபெற்ற புறா பந்தயப்போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தூத்துக்குடியில் நடைபெற்ற புறா பந்தயப்போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. ஹார்பர் புறா பந்தய கிளப் சார்பில் நடத்தப்பட்ட போட்டியில், பல்வேறு இடங்களில் இருந்தும் 260 புறாக்கள் பங்கேற்றன. மதுரை அருகே உள்ள தும்பம்பட்டியில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலை வரை போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில், தூத்துக்குடியை சேர்ந்த வினோத் என்பவருக்கு சொந்தமான இரண்டு புறாக்கள் 90 மற்றும் 91 நிமிடங்களில் பறந்து முதலாவது மற்றும் இரண்டாவது இடத்தை பிடித்து வந்தடைந்தது.