உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி - திமுக மாணவர் அணி சார்பில் எச்சரிக்கை

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை திரும்ப பெறவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என திமுக மாணவர் அணி சார்பில், அதன் செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-12-06 11:53 GMT
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதை திரும்ப பெறவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என திமுக மாணவர் அணி சார்பில், அதன் செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த,  எழிலசரன், போராட்டம் குறித்து தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்