இன்று, நாளை...சூறாவளி போல் களமிறங்கும் மோடி | Pm Modi | Election 2024

Update: 2024-04-28 06:28 GMT

கர்நாடகாவில் வரும் மே 7ம் தேதி நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் 2ம் கட்ட வாக்குப்பதிவிற்காக, பிரதமர் மோடி 2 நாட்கள் கர்நாடக வட மாவட்டங்களில் பிரச்சாரம் செய்கிறார்.இதற்காக நேற்று இரவு தனி விமான மூலம் பெலகாவி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, இன்றும் நாளையும் வட கர்நாடக மாவட்டங்களில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இன்று தாவணகெரே, உத்தர கன்னடா, பெல்காம் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் உரையாற்றுகிறார். பின்னர் பெல்காமில் தங்கும் அவர், நாளை கலபுர்கி, பெல்லாரி, ராய்ச்சூர், கொப்பல் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் பங்கேற்கிறார். கர்நாடகாவில் வட மாவட்டங்களில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவாக 2 நாட்களில் 6 பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்பது அம்மாநில பா.ஜ.க.வினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்