சொசைட்டி பேங்கில் அம்பலப்பட்ட ஆபிசர்ஸ் கைது.. எவ்ளோ நாளா இப்படி நடக்குது? - ஷாக்கில் கஸ்டமர்கள்

Update: 2024-04-28 06:32 GMT

நாமக்கல் கோக்கலை கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களின் பணம் கையாடல் செய்யப்பட்ட விவகாரத்தில், அலுவலர்கள் கைது செய்யப்பட்டனர்.

Vovt

கோக்கலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் உள்ளிட்ட வாடிக்கையாளர்கள் வைத்திருந்த பணத்தை அவர்களுக்குத் தெரியாமலேயே வங்கியில் வேலை செய்த எழுத்தர் சி.பெரியசாமி, மற்றும் செயலாளர் ஏ.பெரியசாமி ஆகியோர் மோசடி செய்து 1 கோடி ரூபாய்க்கு மேல் கையாடல் செய்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டைகளை ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாகவும், வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.

இந்த முறைகேடு தொடர்பாக விசாரிக்கப்பட்டு, ஒரு கோடியே 17 லட்சத்து 79 ஆயிரத்து 644 ரூபாய் அளவிற்கு மோசடி கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முறைகேட்டில் ஈடுபட்ட அ.பெரியசாமி மற்றும் சி.பெரியசாமி ஆகியோர், பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையால் கைது செய்யப்பட்டனர்

Tags:    

மேலும் செய்திகள்