அலங்காநல்லூர் பகுதியில் மாணவர்களிடம் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைதுசெய்யப்பட்டனர்.

Update: 2019-12-04 13:35 GMT
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த இருவர் கைதுசெய்யப்பட்டனர். ரகசிய தகவலின் பேரில் மாறுவேடத்தில் சென்ற போலீசார், கஞ்சா வாங்குவது போல குற்றவாளிகள் இருவரையும் மடக்கிப்பிடித்தனர். விசாரணையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைதுசெய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்