சீன அதிபரை வழியனுப்பி வைத்த பிரதமர் மோடி

இரண்டு நாட்கள் சந்திப்பினை முடித்துக் கொண்டு புறப்பட்ட சீன அதிபரை பிரதமர் மோடி வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

Update: 2019-10-12 11:53 GMT
இரண்டு நாட்கள் சந்திப்பினை முடித்துக் கொண்டு  புறப்பட்ட சீன அதிபரை பிரதமர் மோடி வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்தார். கோவளத்தில் இருந்து, சென்னை விமான நிலையம் வந்த அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித்,  முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்று வழி அனுப்பி வைத்தனர்.  சீன அதிபருடன், சீன அதிகாரிகள் குழுவும் புறப்பட்டுச் சென்றது. இரண்டு நாள் இந்திய சந்திப்பினை முடித்துக்கொண்டு சீன அதிபர் நேபாளம் செல்ல உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்