ஆதம்மை ஆத்தாள் கோயில் கும்பாபிஷேக விழா : ஆறுமுகம் தொண்டமான், குடும்பத்தினர் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள எம்.புதூர் கிராமத்தில், ஆதம்மை ஆத்தாள் கோயில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கோயில் மண்டபத்தில் சுவாமி மற்றும் புனித நீர் அடங்கிய கலசங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன. தொடர்ந்து கலசம் புறப்பாடு நடைபெற்று, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.. இதில், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இலங்கை முன்னாள் மத்திய அமைச்சர் ஆறுமுக தொண்டமான் மற்றும் உ.வா. மாகாண துணை முதலமைச்சர் செந்தில் தொண்டமான் உள்ளிட்டோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.