"ஜெயிச்சிட்டோம் மாறா" - மாநகராட்சி பள்ளியில் முதலிடம்!அசத்திய ஆட்டோ ஓட்டுநர் மகள்

Update: 2024-05-06 12:24 GMT

பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பூங்கோதை 578 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்... இவரது தந்தை பார்த்திபன் ஆட்டோ ஓட்டுநர், தாய் வீட்டு வேலை செய்பவர்... வறுமையிலும் விடாமுயற்சியுடன் படித்து சாதனை படைத்துள்ள பூங்கோதைக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதே பள்ளியில் பயின்ற ஹரிணி பிரியா மற்றும் திவ்யஸ்ரீ ஆகிய 2 மாணவிகளும் 573 மதிப்பெண்கள் பெற்று சென்னை மாநகராட்சி பள்ளிகளிலேயே 3ம் இடத்தைப் பிடித்துள்ளனர்... தந்தை இன்றி தாயின் அரவணைப்பில் மட்டும் வளர்ந்தவர் ஹரிணிப் பிரியா... அதேபோல் திவ்யஸ்ரீயும் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்... ஏழ்மை கல்விக்கு ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வண்ணம் 3 மாணவிகளும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்