நாட்டின் வளர்ச்சியை விட மக்களின் வளர்ச்சியே முக்கியம் - பிரேமலதா விஜயகாந்த்

நாட்டின் வளர்ச்சியை மட்டும் கணக்கில் கொள்ளாமல் மக்களின் வளர்ச்சியையும் மத்திய அரசு கணக்கில் கொள்ள வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Update: 2019-09-03 12:51 GMT
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேமுதிக தொடங்கி 15 ஆண்டுகள் ஆவதை  முன்னிட்டு, திருப்பூரில் வருகிற 15 ஆம் தேதி முப்பெரும் விழா நடக்க உள்ளதாக கூறினார். சுங்கச்சாவடி கட்டண உயர்வால்,மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுளனர் என கூறிய பிரேமலதா விஜயகாந்த்  விரைவில் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்