தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற அண்ணன்

தர்மபுரி அருகே சொத்து தகராறில் அண்ணன் தம்பியை கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-08-23 05:21 GMT
கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்த வெங்கடாசலத்திற்கும், அவரின் தம்பி நரசிம்மனுக்கும் இடையே அடிக்கடி சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்தில் இருந்த அண்ணன், குமாரசாமிபேட்டை அருகே தம்பியை இடைமறித்து சொத்து பற்றி பேசியுள்ளார். அப்போது, சகோதரர்களிடையே ஏற்பட்ட வாய் தகராறு கைகலப்பாக மாறியுள்ளது. ஆத்திரம் அடைந்த அண்ணன், ஒரு கணம் கூட சிந்திக்காமல், தான் மறைத்து வைத்திருந்த கூர்மையான கத்தியால் தம்பியை குத்தி கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றார். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார், நரசிம்மன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதனை வெளியிட்ட போலீசார், தலைமறைவாக உள்ள அண்ணன் வெங்கடாசலத்தை தேடி வருகின்றனர். பொதுமக்கள் அதிகம் கூடும் இடத்தில், நடந்த இந்த கொலை சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியது. 
Tags:    

மேலும் செய்திகள்