BREAKING || ஜாபர் சாதிக்கிடம் வாக்குமூலம்.."இம்பார்டன்ட் 15 மினிட்ஸ்" -கிரீன் சிக்னல் கொடுத்த கோர்ட்

Update: 2024-05-08 07:04 GMT

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் - அமலாக்கத் துறை வாக்குமூலம் பதிவு செய்யும்போது தனது வழக்குரைஞர் உடனிருக்க அனுமதிக்க கோரி ஜாபர் சாதிக் மனு மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சற்று நேரத்தில் தொடங்குகிறது....

அமலாக்கத் துறை சார்பில் அரசு தரப்பு கூடுதல் வழக்குரைஞர், ஜாபர் சாதிக் தரப்பு வழக்குரைஞர்கள் ஆஜர்...

போதை பொருள் கடத்தல் வழக்கில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேரிடம் மே 8,9, 10 ஆகிய தேதிகளில் திகார் சிறைக்கு வாக்குமூலம் பெற சுனில் சங்கர் யாாதவ் உள்ளிட்ட சென்னை அமலாக்கத் துறையினருக்கு சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது...

அமலாக்கத் துறை சார்பில் ஆட்சேபம் தெரிவித்து வாதம்

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் - அமலாக்கத் துறை வாக்குமூலம் பதிவு செய்யும்போது ஜாபர் சாதிக்கின் வழக்குரைஞர் பிரபாகரன் உடனிருக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி....

15 நிமிடங்கள் உடனிருக்க அனுமதி

Tags:    

மேலும் செய்திகள்