தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு : சவரன் ரூ.28,896 ஆக உயர்ந்தது

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாயை எட்டும் நிலை உருவாகி உள்ளது.

Update: 2019-08-13 06:48 GMT
நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 612 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி ஒரு சவரன் தங்கம் 28 ஆயிரத்து 896 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தொடர்ந்து தங்கம் விலை கணிசமாக உயர்ந்து வருவதால் ஒரு சவரன் 30 ஆயிரம் ரூபாயை எட்டும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்