கொதிக்கும் சூரியன்.. இன்று தொடங்கிய ஆட்டம்... 25 நாட்களுக்கு காத்திருக்கும் சம்பவம் - மக்களே உஷார்

Update: 2024-05-04 03:02 GMT

தமிழ்நாட்டில் ஏற்கெனவே வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் நிலையில், கத்தரி வெயில் இன்று தொடங்குவதால் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். நடப்பாண்டில் கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம், இன்று தொடங்கி, வரும் 28-ஆம் தேதி வரை, 25 நாட்கள் நீடிக்க உள்ளது. தமிழ்நாட்டில் மார்ச் மாதம் தொடக்கத்தில் இருந்தே வெயில் கொளுத்தி வரும் நிலையில், சேலம், ஈரோடு, கரூர், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்தி வருகிறது. கடந்த இரு தினங்களாக சில இடங்களில் வெப்ப அலை வீசி வரும் நிலையில், கத்தரி வெயில் தொடங்குவதால், பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்