"அந்த நாள் இந்தியாவே உண்மையை உணரும்" - பகீர் கிளப்பும் ராகுல் காந்தி

Update: 2024-05-04 02:52 GMT

மக்களவைத் தேர்தலை ஒட்டி, மகாராஷ்டிர மாநிலம், புனே நகரில் நடைபெற்ற காங்கிரஸ் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது, தங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமையும்போது, ஜாதி வாரி கணக்கெடுப்பு, பொருளாதார கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், அனைத்து நிறுவனங்களிலும் பணிபுரிவோர் பற்றிய கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

பத்திரிகை-ஊடகம், பன்னாட்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஆகிய இடங்களில் பட்டியலினத்தவர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் எத்தனை பேர் பணிபுரிகிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். இந்த புரட்சிகரமான நடவடிக்கை மூலம் உண்மை வெளிக்கொண்டு வரப்படும் என்று கூறிய ராகுல் காந்தி, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் நாளில், இந்தியாவின் யதார்த்த நிலையை நாட்டு மக்கள் தெரிந்து கொள்வார்கள் என்றும் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்