ராகுலுக்கு தோல்வி பயமா? - மோடியை வைத்தே மோடிக்கு காங். தரமான பதிலடி

Update: 2024-05-04 03:07 GMT

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிடுவதை விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பதிலடி கொடுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டுள்ள ராகுல் காந்தி, இரண்டாவது தொகுதியாக, தாம் வழக்கமாக போட்டியிடும் அமேதி தொகுதிக்குப் பதிலாக ரே பரேலியில் போட்டியிடுகிறார். மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பிரச்சாரத்தில் இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, வயநாட்டில் தோல்வி உறுதியாகி விட்டதால், இரண்டாவது தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதாக கூறினார். அமேதியில் தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில்தான் அவர் ரேபரேலியில் போட்டியிடுகிறார் என்றும் மோடி கூறினார். இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடி தனது கண்ணியத்தை விட்டு விட்டு சிறு பிரச்சனைகளைப் பற்றி பேசுகிறார் என்று கூறினார். பாஜக மூத்த தலைவர்களான அத்வானி, வாஜ்பாய் ஆகியோர் 2 தொகுதிகளில் போட்டியிடவில்லையா? பிரதமர் மோடியே 2 தொகுதிகளில் போட்டியிடவில்லையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்