பல்வேறு மாவட்டங்களில் கனமழை - மக்கள் மகிழ்ச்சி

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2019-07-18 21:39 GMT
மதுரையில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில், குளிர்ந்த காற்றுடன் கனமழை பெய்தது. 2 மணிநேரம் பெய்த மழையால் ஆங்காங்கே வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.

கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் சுற்று வட்டாரப் பகுதிகளில் 20 நிமிடங்களுக்கு மேல் மிதமான மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள சிக்கோலா பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
Tags:    

மேலும் செய்திகள்