தொழிலாளர்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்து சொன்ன முதலமைச்சர் | CM Stalin

Update: 2024-04-30 06:27 GMT

மே தினத்தையொட்டி உழைக்கும் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான் என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தொழிலாளர்களின் தியாக உழைப்பை போற்றி பாடுவார் என்று கூறியுள்ளார். தொழிலாளர் குடும்பங்கள், கல்வி, பொருளாதார நிலைகளில் உயர்ந்து உன்னத நிலையை பெற நெஞ்சார வாழ்த்துவதாக கூறிய அவர், தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பேற்ற காலங்களில் எல்லாம் தொழிலாளர் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்