"கத்திய எடுத்து கைய வெட்டிட்டாங்க.. ரத்த வெள்ளத்துல மிதந்து கிடந்தாரு.." - நடுக்கடலில் பயங்கரம்

Update: 2024-04-30 06:46 GMT

நாகை மாவட்டம் செருதூர் மீன்பிடி துறைமுகத்திலிருந்து அக்கரைப்பேட்டையை சேர்ந்த 4 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரை அருகே அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், முருகன் என்ற மீனவர் ரத்த வெள்ளத்தில் படகில் சாய்ந்துள்ளார். மற்ற மூன்று மீனவர்களும் உயிருக்கு பயந்து கடலில் குதித்து தப்பிய நிலையில், மீனவர்களின் மீன்பிடி தளவாட பொருட்கள், மீன்கள் உள்ளிட்டவைகளை இலங்கை கடல் கொள்ளையர்கள் அள்ளி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த மீனவர் முருகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது....

Tags:    

மேலும் செய்திகள்