மனைவியை அழைத்து வந்த கணவன்..மேற்கூரையை பிரித்து பார்த்தவர்களுக்கு கண்ணில் பட்ட அதிர்ச்சி காட்சி

Update: 2024-04-30 06:34 GMT

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட 3 மாத கர்ப்பிணி, தனது கணவருடன் தற்கொலை செய்துக்கொண்டார்.கருமஞ்சிரையை சேர்ந்த முத்துக்குமாரும் - சந்திராவுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது சந்திரா திருப்பூர் எல்ஆர்ஜி கல்லூரியில் படித்து வருகிறார். அவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். திருமணத்துக்கு பின் கணவன் மனைவிக்கு

அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 27-ம் தேதி ஏற்பட்ட தகராறை அடுத்து, சந்திரா ஊத்துக்குளியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அன்று, கணவர் முத்துக்குமார், மனைவி சந்திரா கருமஞ்சிரையில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களது வீடு திங்கள்கிழமை காலை நீண்டநேரமாகியும் திறக்காததால், அருகில் இருந்தவர்கள் வீட்டின் மேற்கூரையை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. உடலை கைப்பற்றி குன்னத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்