சிகிச்சைக்கு சென்று இரட்டை கொலை செய்த வடமாநில இளைஞர் - சென்னையில் அதிபயங்கரம்

Update: 2024-04-30 06:19 GMT

ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்பட்ட வழக்கில், ராஜஸ்தானை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்ஆவடி மிட்டனமல்லி பகுதியை சேர்ந்த சித்த மருத்துவர், சிவன் நாயர். இவர் தனது வீட்டிலேயே சித்த மருத்துவம் பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம், சிவன் நாயரும், அவரது மனைவி பிரசன்னா குமாரியும் வீட்டில் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்தனர். சம்பவ இடத்தில் முத்தாபுதுப்பேட்டை போலீசார் நடத்திய சோதனையில், ராஜஸ்தானை சேர்ந்த மகேஷ் என்பவரது செல்போன் கிடைத்தது. மேலும், மகேஷ் தற்போது வளசரவாக்கத்தில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. உடனடியாக மகேஷை பிடித்து விசாரிக்கையில், அவரே இரண்டு கொலையையும் செய்தது தெரியவந்தது. சிகிச்சை பார்க்க சென்றபோது, அவருக்கும் சித்த மருத்துவரின் மனைவிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதமே, இந்த கொலைக்கு காரணமாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்