"பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து நிற்போம்" - தினகரன்

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-24 00:22 GMT
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு தலை வணங்குகிறோம் என அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் கருத்துகளை பதிவிட்டுள்ள அவர், அமமுகவுக்கு வாக்களித்து ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜெயலலிதா கற்றுத் தந்த துணிவோடு, பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து நிற்போம் என்றும், தமிழக மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்