பெங்களூரூ போலீசாரிடம் அவகாசம் கேட்ட லதா ரஜினிகாந்த்
கோச்சடையான் பட விவகாரம் தொடர்பாக, வருகிற 20 தேதிக்கு பிறகு ஆஜராகி விளக்கம் தர, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, பெங்களூரூ போலீசாரிடம் அவகாசம் கேட்டுள்ளார்.
கோச்சடையான் பட விவகாரம், பண மோசடி குறித்து ஏட்பீரோ விளம்பர நிறுவனம் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த, இம்மாதம் ஆறாம் தேதி ஆஜராக வேண்டும் என, லதா ரஜினிகாந்த்துக்கு பெங்களூரூ போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். இதற்கு பதில் அனுப்பியுள்ள லதா ரஜினிகாந்த், நோட்டீஸ் 4 ஆம் தேதி தான், தனக்கு கிடைத்தாகவும், தற்போது பயணம் மேற்கொண்டிருப்பதால் ஆஜராக இயலாது என விளக்கம் அளித்துள்ளார். இதனால், வரும் 20 தேதிக்கு மேல், ஆஜராகி விளக்கம் தர, பெங்களூரூ போலீசாரிடம் அவர் அவகாசம் கேட்டுள்ளார்