"கேள்விகள் கேட்காத தூரம் பார்க்க வேண்டும்" - வாய் திறந்து ஜாபர் சாதிக் கோரிக்கை.. திகைத்த ED

Update: 2024-05-07 06:49 GMT

போதைப்பொருள் கடத்தல் விவகாரம் : பண மோசடி வழக்கில் அமலக்காத் துறை வாக்குமூலம் பதிவு செய்யும்போது தனது வழக்குரைஞரையும் உடனிருக்க அனுமதிக்க கோரி ஜாபர் சாதிக் மனு

இது தொடர்பாக டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக்கின் வழக்குரைஞர் பிரபாகரன் தாக்கல் செய்துள்ள மனுவில்

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னிடம் அமலாக்கத் துறை மே 8, 9,10 தேதிகளில் வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளது. அப்போது தனது வழக்குரைஞர் உடனிருக்க அனுமதிக்க வேண்டும்

குறிப்பாக விசாரணை நடத்தும்போது அந்த விசாரணை கேள்விகள் கேட்காத தூரத்தில் இருந்து பார்க்கும் வகையில் தனது வழக்குரைஞருக்கு அனுமதி அளிக்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் அனுமதித்தால் போதும். எனவே அது தொடர்பாக உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்