அரசு ஊழியர்கள் இன்று போராட்டம்

அகவிலைப்படி உயர்வு கோரி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

Update: 2019-05-10 01:47 GMT
மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பது வழக்கம். ஆனால், இதுவரை அரசாணை வெளியாகாத நிலையில், ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கக் கோரியும் நிலுவை தொகையை ரொக்கமாக வழங்கக் கோரியும் இன்று போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாகவும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. 


Tags:    

மேலும் செய்திகள்