"இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்" - தங்கும் விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை

Update: 2024-05-09 02:02 GMT

இ-பாஸ் நடைமுறையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தங்கும் விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இ-பாஸ் நடைமுறையால், சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்து, தங்கும் விடுதிகள் காலியாக இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். சுற்றுலாத் தொடர்பான அனைத்து தொழில்களும் முடங்கி, தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லாவிட்டால் அனைத்து தங்கும் விடுதிகளையும் மூடி போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்