08நாய் வளர்ப்பவர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Update: 2024-05-09 02:04 GMT

சென்னை மதுரவாயலில் அபாயகரமான நாய்களை வளர்க்கும் நபரின் வீட்டை முற்றுகையிட்டு அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். ஜான்சன் என்பவர் ஜெர்மன் ஷெப்பர்ட் உள்ளிட்ட 5 வெளிநாட்டு இன நாய்களை சட்ட விரோதமாக வளர்த்து, அவற்றை விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள், இரவு நேரங்களில் அதீத சத்தத்துடன் நாய்கள் குரைப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அச்சத்தில் இருப்பதாக குற்றம்சாட்டினர். தகவல் அறிந்து வந்த போலீசார், நாய்கள் வளர்ப்பு குறித்து புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து விட்டு சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்