கோவில் அடிவாரத்தில் தீப்பிடித்து எரிந்த மின்கம்பம் : அலறி அடித்து ஓடிய பக்தர்கள்

பழனி மலைக்கோவில் அடிவாரத்தில் மின்கம்பம்‌ திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பக்தர்கள் அலறி அடித்து ஓடினர்.

Update: 2019-03-14 07:56 GMT
பழனி மலைக்கோவில் அடிவாரத்தில் மின்கம்பம்‌ திடீரென தீப்பிடித்து எரிந்ததால், பக்தர்கள் அலறி அடித்து ஓடினர். தீப்பொறி பறந்து அருகில் உள்ள பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோவில் செக்யூரிட்டிகள் விரைவாக  மின்சாரத்தை துண்டித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்