ட்ராபிக் சிக்னலில் பசுமை பந்தல்.. புதுச்சேரியில் கலக்கல் ஐடியா | Summer | Traffic Signal

Update: 2024-04-29 08:13 GMT

வாகன ஓட்டிகள் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கும் வகையில், புதுச்சேரியில் உள்ள பல்வேறு சிக்னல்களில் சமூக ஆர்வலர்கள் பசுமை பந்தல் அமைத்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும் போது, 3 முதல் 5 நிமிடங்கள் வரை போக்குவரத்து சிக்னலில், வெயிலில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சோர்வடைவதோடு, கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள அண்ணா சதுக்கம், காமராஜர் சதுக்கம், இந்திராகாந்தி சதுக்கம், ராஜூவ் காந்தி சதுக்கம், அஜந்தா சதுக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னல்களில் சமூக ஆர்வலர்கள் பசுமை பந்தல் அமைத்துள்ளனர். இது வாகன ஓட்டிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்