பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை - இயக்குனர் பா.இரஞ்சித் கருத்து
கலாச்சாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய முன் வரவேண்டும் என இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்
ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூக செயல்பாடு, கலாச்சாரம் பற்றிய பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய முன் வரவேண்டும் என இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தை கேள்விகேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்பு கோர சொல்வதால் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். பாதிக்கப்பட்ட, பாதிக்கப்படபோகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கி கொண்டுதான் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்