தண்ணீர் பாய்ச்சுவதில் அடிதடி தகராறு - இரு தரப்பினருக்கு இடையே தாக்குதல்

Update: 2024-04-29 02:20 GMT

கடலூர் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்கு வந்தவர்கள் அடித்துக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பாளையங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையே தண்ணீர் பாய்ச்சுவதில் தகராறு ஏற்பட்டு, காயங்களுடன் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக வந்தனர். அங்கு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனை சிகிச்சை பெற வந்த நோயாளி ஒருவர் வீடியோவா எடுத்துள்ளார். அந்த வீடியோ வெளியாகியுள்ள நிலையில், சோழத்தரம் போலீசார் இரண்டு தரப்பினரையும் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்