17 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய அரசு பேருந்து ஓட்டுனர் போக்சோ வழக்கில் கைது

Update: 2024-04-29 01:52 GMT

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே, அரசு பேருந்து ஓட்டுனர், போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டார். வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த ஓட்டுனர் ராஜாவிற்கும், ஒரங்கூரைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவிக்கும் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த ஒன்றரை வருடங்களாக ராஜா வைத்தியநாதபுரத்தில் உள்ள தனது வயலில் உள்ள பம்பு செட்டிற்கு அந்த பெண்ணை அழைத்து சென்று, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தனிமையில் இருந்து வந்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமாக உள்ள தகவல் அறிந்து பெண்ணின் குடும்பத்தார், ராமநத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து ராஜா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்