ஜூன் 4 வரை.. 96 மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தடை - காவல்துறை அதிரடி அறிவிப்பு

Update: 2024-04-29 02:03 GMT

கோவை மக்களவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியை தற்காலிக ரெட் ஜோனாக அறிவித்துள்ள காவல்துறை அரசு தொழில்நுட்ப கல்லூரியை சுற்றியுள்ள

சாய்பாபா காலனி, வெங்கடாபுரம், வேலாண்டிபாளையம், இடையர்பாளையம், வடகோவை , ஆர் எஸ் புரம், பூசாரிபாளையம், சீரநாயக்கன்பாளையம், வடவள்ளி, பி.என்.புதூர் ஆகிய பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4 ம் தேதி வரை 96 மணி நேரத்திற்கு ஒரு முறை இந்த தடை உத்தரவு நீட்டிக்கப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்