மானிய சலுகையுடன் கடன் வழங்குவதாக வதந்தி
ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த பெண்கள்
ஏழை எளிய,நடுத்தர மக்களுக்கு பாரத பிரதமர் திட்டத்தின் கீழ் மானிய சலுகையுடன் ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்குவதாக நெல்லை மாவட்டம் களக்காடு ,நாங்குநேரி,ராதாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வதந்தி பரவியது. இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பெண்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து கடன் கேட்டு மனு கொடுத்தனர்.பின்னர் இந்த செய்தி வதந்தி என தெரிந்ததை அடுத்து அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்