மக்களே உஷார்.. அடுத்த 4 நாட்கள்.. - வானிலை மையம் எச்சரிக்கை

Update: 2024-04-28 02:28 GMT

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது..

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 2 டிகிரி செல்சியசும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 3 முதல் 5 டிகிரி செல்சியசும் அதிகமாக வெப்பநிலை பதிவாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 35 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை 27 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் என்றும், நேற்று அதிகபட்சமாக ஈரோட்டில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்