ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நினைவேந்தல் நிகழ்ச்சி மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

Update: 2024-04-28 02:24 GMT

மறைந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.எஸ்.ராகவன், பா.ஜ.,கவுக்கும், தனக்கும் பல ஆலோசனைகளை வழங்கியவர் என்று, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அண்மையில் காலமான பி.எஸ்.ராகவனின், நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்றது. இதில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்களான கிருஷ்ணமூர்த்தி, கோபாலசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீதாராமன், பி.எஸ்.ராகவன், வங்காளதேசம் பிரிவினை மற்றும் பாகிஸ்தான் உடனான போர் போன்ற இக்கட்டான காலகட்டங்களில் உள்துறையில் 9 ஆண்டுகள் சிறப்பாக பணியாற்றியவர்கள் என்று, நினைவு கூர்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்