பிஸ்கட் என நினைத்து எலி பிஸ்கட்டை சாப்பிட்ட சிறுமிகள் - போலீசார் தீவிர விசாரணை

Update: 2024-04-28 02:26 GMT

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே பிஸ்கட் என நினைத்து எலி பிஸ்கட்டை சாப்பிட்ட 2 சிறுமிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அனுமந்தனூர் கிராமத்தைச் சேர்ந்த கட்டட தொழிலாளி அன்பழகனுக்கு 10 மற்றும் 3 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில்,

எலிக்கு வைப்பதற்காக அன்பழகன் எலி பிஸ்கெட்டை வாங்கி வைத்திருந்துள்ளார். இதனை பிஸ்கெட் என நினைத்த சிறுமிகள் அந்த பிஸ்கெட்டை சாப்பிட்டுள்ளனர். பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்