ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் - வழக்கு நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

Update: 2024-04-28 02:16 GMT

பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாாக்கத் துறையினர் கடந்த ஜனவரரி 31-ஆம் தேதி கைது செய்தனர். கைதுக்கு எதிராாக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 27,28 தேதிகளில் விசாரித்த நிலையில், இதுவரை தீர்ப்பு கூறப்படவில்லை. தீர்ப்பு கூறுவதற்கு முன் மக்களவைத் தேர்தல் நிறைவடைந்துவிடும் என்றும், இது குறித்து மேலும் கருத்து தெரிவித்தால் நீதித்துறை மீதான விமர்சனம் என்றாகிவிடும் என்று, மூத்த வழக்குரைஞர் கபில் சிபில், உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு முன், கடந்த 24-ஆம் தேதி முறையிட்டார். இந்த முறையீட்டை பரிசீலித்த நீதிபதி சஞ்சீவ் கன்னா, தலைமை நீதிபதி அலுவலகம் முடிவு செய்யும் என தெரிவித்தார். இந்நிலையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரின் மனுவை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு திங்கள்கிழமை விசாரிக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்