விளை நிலங்களில் தண்ணீர் எடுக்க தடை விதிப்பு : மாற்று ஏற்பாடுகள் செய்யாவிட்டால் வேலை நிறுத்தம்

விளைநிலங்களில் தண்ணீர் எடுப்பதற்கான தடைக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் விரைவில் வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2019-01-19 06:28 GMT
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி வீட்டில் பேச்சுவார்த்தைக்காக அழைக்கப்பட்டிருந்த நிலையில் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமைச்சர் வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தனியார் குடிநீர் லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் கஜலிங்கம், கோரிக்கை தொடர்பாக வரும் திங்கள் கிழமை உள்ளாட்சி துறை அமைச்சரை சந்தித்து பேச உள்ளதாக தெரிவித்தார். அதில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் இரண்டு, மூன்று நாட்களில் வேலை நிறுத்த போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்றும் கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்