தினத்தந்தி சார்பில் கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி

30 மாணவர்களுக்கு தலா ரூ10,000 கல்வி உதவித்தொகை

Update: 2019-01-11 04:58 GMT
தஞ்சை மாவட்டம் கண்ணதங்குடியை அடுத்துள்ள மேலையூர் அரசுப்பள்ளியில், தினத்தந்தியின் கல்வி நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களைச் சேர்ந்த 30 மாணவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் கல்விநிதி வழங்கப்பட்டது. பின்னர் பேசிய மாணவர்கள், தினத்தந்தியின் கல்வி நிதி தங்களின் மேல்படிப்பிற்கு பயனுள்ளதாக இருக்கும் என கூறினர். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றதற்கு தினத்தந்தி இதழில் வெளியான வினா விடை தொகுப்பும் ஒரு முக்கிய காரணம் என மாணவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்