குடிபோதையில் பிறந்தநாள் கொண்டாட்டம்இளைஞர்களை விரட்டிய தந்தை மகன்

Update: 2024-04-29 03:01 GMT

கிருஷ்ணகிரியில் நண்பனை தாக்கியவர்களை மடக்கி பிடிக்க முயன்ற இளைஞர், இருசக்கர வாகனம் ஏற்றி கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தின்னகழனி கிராமத்தில் 4 இளைஞர்கள் மதுபோதையில் பிறந்த நாள் விழா கொண்டாடினர். அவர்களை அங்கிருந்து போகுமாறு அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மகன் வெற்றி ஆகியோர் கூறியுள்ளனர். இதனால் தகராறு ஏற்பட்டதால், அந்த இடத்தை விட்டு சென்ற இளைஞர்கள், மீண்டும் உருட்டுக்கட்டை பாட்டிலுடன் வந்து, சின்னத்தம்பி மற்றும் வெற்றியை தாக்கியுள்ளனர். பின்னர், நான்கு இளைஞர்களும் இரண்டு இரு சக்கர வாகனங்களில் தப்பிக்க முயன்றபோது, வெற்றியின் நண்பர் கார்த்திக், மடக்கி பிடிக்க முயற்சித்தார். அப்போது, இருசக்கர வாகனத்தை கார்த்திக் மீது ஏற்றியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், கார்த்தியை பின் தொடர்ந்து வந்த அவரது தந்தை தேவராஜையும், அந்த இளைஞர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக கிட்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவா மற்றும் அவரது நண்பர்கள் அருண், கணேஷ், கார்த்தி ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்