ஒரண்டை இழுத்த அதிமுகவினர்..ஆட்களை இறக்கிய திமுகவினர்..நள்ளிரவில் நடந்த கேங் வார்

Update: 2024-04-29 03:14 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகள் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் போதே இரு கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், திமுகவினர் மது பானங்கள் விற்பதாகவும், லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருவதாகவும் கூறி அதிமுகவினர் போலீசில் புகாரளித்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆனங்கூர் அருகே இரவு 11 மணியளவில் நின்று கொண்டிருந்த திமுக நிர்வாகிகள் இருவரை அதிமுகவினர் அவதூறாக பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. உடனே, தங்களின் ஆதரவாளர்களை திமுக நிர்வாகிகள் செல்போன் மூலம் வரவழைத்த நிலையில், திமுகவினரும், அதிமுகவினரும் மோதிக்கொள்ளும் சூழல் உருவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்த நிலையில், இரு தரப்புமிருந்தும் புகார் பெற்று அனைவரையும் கலைந்து போகச் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்