தொழிலாளி வளர்ச்சி பிடிக்காமல் சதி வலை பின்னிய முதலாளி - கடிதம் எழுதி வைத்துவிட்டு த*கொலை

Update: 2024-04-29 03:19 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, பெட்டிக் கடை நடத்தி வந்தவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மூவரை போலீசார் கைது செய்தனர். மதுராந்தகம் அடுத்த பாலூர் கிராமத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் செல்வம். 6 மாதங்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள மகி என்பவருக்கு சொந்தமான எண்ணெய் கடையில் வேலை பார்த்து வந்த இவர், பின்னர் சொந்தமாக பெட்டிக் கடை ஆரம்பித்திருக்கிறார். இந்நிலையில், சம்பவத்தன்று கடை திறக்க வந்த செல்வத்தை மகி மறித்து தகராறு செய்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த செல்வம், தனது முன்னாள் உரிமையாளர் மகி உட்பட மூவர் குறித்து கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், செல்வம் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த மூவரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்