தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் கவிழ்ந்த கார்.. பரிதாபமாக பறிபோன இரு உயிர்கள்

Update: 2024-04-29 03:04 GMT

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில், தண்ணீர் தேங்கிய பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கணவன்-மனைவி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். நெல்லை, பாளையங்கோட்டையை சேர்ந்த பில்டிங் காண்ட்ராக்டர் வெங்கடேஷ் மற்றும் அவரது மனைவி சுமித்ரா உயிரிழந்த இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தம்பதியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்