கோவில் திருவிழா.. தேர் சக்கரத்தில் சிக்கி துடிதுடிக்க 2 பேர் பலி

Update: 2024-04-29 03:09 GMT

கர்நாடகாவில் தேர் சக்கரத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜயபுரா மாவட்டத்தில் உள்ள லட்சயானா கிராமத்தில் சித்தலிங்கா மடம் சார்பில்

தேரோட்டம் நடைபெற்றது. அப்போது கூட்ட நெரிசல் காரணமாக 2 பேர் தேர் சக்கரத்தில் சிக்கி கொண்டனர். இதனை யாரும் கவனிக்காததால் அவர்கள் மீது தேர் ஏறி இறங்கியதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்