"தமிழக கடலோர பகுதியில் கனமழை பெய்யும்" - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தின் கடலோர பகுதியில் நாளை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Update: 2018-11-20 07:12 GMT
மத்திய தெற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. இதன் காரணமாக தமிழக கடலோர பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இன்றும், நாளையும், மன்னார் வளைகுடா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்