வாணியம்பாடியில் களைகட்டும் கள்ளச்சாராய விற்பனை - அதிர்ச்சி வீடியோ வெளியீடு

Update: 2024-04-28 14:39 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சுற்று வட்டார பகுதிகளில், 24 மணிநேரமும் கள்ள சாராய விற்பனை களை கட்டும் வீடியோ, வெளியாகி உள்ளன.

தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மலைப்பகுதிகளுக்கு போலீசார் சென்று கள்ள சாராயம் காய்ச்சும் இடங்களை கண்டறிந்து கள்ள சாராய அடுப்புகள், சாராய ஊறல் மற்றும் மூலப்பொருட்களை அழித்து வருகின்றனர்.

இருப்பினும் அங்கு இடைவிடாமல் கள்ள சாராயம் காய்சபட்டு வருகிறது. அங்கு காய்ச்சப்படும் கள்ள சாராயம் பாக்கெட்டுகளில் அடைத்து, வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான உதயேந்திரம், மேட்டுப்பாளையம், தரைக்காடு, திம்மம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு, பகலாக 24 மணி நேரமும் படுஜோராக நடைப்பெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்