"பாஜக-பிஜேடி கொள்ளை ஆட்சி" - வெளுத்து வாங்கிய ராகுல்..!

Update: 2024-04-28 14:34 GMT

பாஜகவும் - பிஜூ ஜனதளமும் இணைந்து ஒரு சில தொழிலதிபர்களுக்கு நன்மை செய்து பொதுமக்களுக்கு அநீதி இழைத்து வருவதாகவும், இந்த அநீதியை ஒழித்து, நீதியை நிலைநாட்ட, காங்கிரஸ் கட்சி போராடி வருவதாக, ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

ஒடிசாவின் கேந்திரபராவில் நடைபெற்ற தேர்தல் பிராசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், டெல்லியில் நரேந்திர மோடி எப்படி ஒரு சிலருக்காக அரசை நடத்துகிறாரோ, அதேபோல் நவீன் பட்நாயக், இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்காக அரசை நடத்துவதாக குற்றம்சாட்டினார். ஒடிசாவில் பாஜக-பிஜூ ஜனதா தளம் இடையே திருமணம் நடைபெற்றதாகவும், அதன் மூலம் அவர்கள் ஒடிசா மக்கள் பணத்தை திருடிவிட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். பாஜகவும் - பிஜூ ஜனதளமும் பொதுமக்களுக்கு அநீதி இழைத்து வருவதாகவும், இந்த அநீதியை ஒழித்து, நீதியை நிலைநாட்ட, காங்கிரஸ் கட்சி போராடி வருவதாக ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என ராகுல் உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்